திருக்குறள்

672.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.

திருக்குறள் 672

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.

பொருள்:

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

மு.வரததாசனார் உரை:

காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.